ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டே படுகொலை! – பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு.

களுத்துறை மாவட்டம், பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான இருவரில் 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாகத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேகநபர்களையும் இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.