ரயிலுடன் மோதியது கார்; 2 பேர் வைத்தியசாலையில் கரையோர சேவைகள் பாதிப்பு.

பூஸா ரயில் நிலையத்துக்கு அருகில் வாகனம் ஒன்று இன்று காலை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானமையால், கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாத்தறையிலிருந்து பயணித்த சாகரிகா ரயிலில், கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும், அவர்கள் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.