வீதியில் சென்ற மாணவியை கடத்த முயன்ற குழு: பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு.

யாழ்.வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப் பிடித்து கயெஸ் வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வட்டுக்கோட்டையில் பஸ்சில் வந்து இறங்கிய மாணவியை கூட்டிச் செல்வதற்காக தாயார் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த வேளையில், தாயின் முன்னே கயெஸ் வாகனத்தில் மகளை கடத்த முற்பட்ட போது அங்கிருந்த இளைஞர்கள் குறித்த குழுவை மடக்கிப் பிடித்ததோடு, தாக்குதலும் மேற்கொண்டனர்.

இந்நிலையில், கைதானவர்களை வட்டுக்கோட்டைப் பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் சமீப காலமாக சிறுவர்கள் கடத்தல் கொலை போன்ற செய்திகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.