ஸ்டாலின் – மொரகொட இன்று முக்கிய சந்திப்பு.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின்போது தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.