சுயாதீன உறுப்பினராகச் செயற்படத் தீர்மானித்த சம்பிக்க ரணவக்க.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராகச் செயற்படத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

நாரஹேன்பிட்டியில் உள்ள 43 ஆம் படையணி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி இது தொடர்பில் அவர் விசேட அறிவிப்பொன்றை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, அமைச்சுப் பதவியை ஏற்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பையும் சம்பிக்க நிராகரித்துள்ளார்.

எதிரணியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்க அவர் உத்தேசித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.