பஸில் நாளை இராஜிநாமா? எம்.பியாகின்றாரா தம்மிக்க? சிங்கள இணையம் பரபரப்புச் செய்தி.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை இராஜிநாமா செய்யவுள்ளார் என்று சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே சட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே பஸில் பதவி விலகுகின்றார்.

அந்த இடத்துக்கு பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனவும், அவருக்கு முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.