முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 39 பேருக்கு எதிரான மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 39 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை அடுத்த மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தின் திறமையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற முடிவுகளால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், நாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் சகிக்க முடியாத பணவீக்கத்தை உருவாக்குவதாகவும் மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கலாநிதி மஹீம் மெண்டிஸ் உட்பட திறந்த பல்கலைக்கழகத்தின் மூன்று விரிவுரையாளர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல். டி. பி. தெஹிதெனிய உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.