மன்னார் சூரிய சக்தி திட்டத்தை அதானியிடம் , ஜனாதிபதி கொடுக்கச் சொன்னது உறுதியானது

மன்னார் சூரிய சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ சொன்னது உண்மையாகியுள்ளது. அப்போது பெர்டினாண்டோ நிதியமைச்சின் செயலாளராக இருந்தார். அவர் , ஆட்டிகலவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் இதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் நவம்பர் 25, 2021 அன்று  பெர்டினாண்டோவால் சமர்ப்பிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், இத்திட்டத்தை அதானி நிறுவனத்திடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக அதில் குறிப்பிட்டார். அதன்பின் வந்த அழுத்தத்தால் அவர் தனது பதவியை விட்டு விலகினார்.

இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

இதோ கடிதம்:

Leave A Reply

Your email address will not be published.