விமான நிலையத்திற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைத் தமிழர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Vancouver சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தமிழருடையது என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த மாத ஆரம்பத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட இவர் சடலமாக மீட்கப்பட்டார் என ரோயல் கனேடியன் மவுன்ட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 9ஆம் திகதி காணாமல் போனதாக முறையிடப்பட்டபோது அவர் அதிக போதையில் இருந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் கூறப்பட்டது.

எனினும் இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிடவில்லை என்பதுடன், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என தெரிவித்தனர்.

இலங்கை பண்டாரவளையைப் பிறப்பிடமாக கொண்ட குறித்த நபர் கடந்த மாதம் 9ஆம் திகதி காலமானதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.