வீதி விபத்தை தடுப்பதற்கான கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறக்கூடியதான வீதி விபத்துக்களை தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராயும் பொருட்டு  அனைத்து தரப்பினரதும் பங்குபற்றுதலுடனான  கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றது.

(18-08-2020) மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த இரண்டாவது கலந்துரையாடலில் வைத்திய அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மற்றும் போக்குவரத்தோடு தொடர்புள்ள துறைசார் திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் தரவுப்பகுப்பாய்வின் அடிப்படையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்வதற்கான காரணிகள் இனங்காணப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டது.
அத்தோடு துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

Comments are closed.