நோர்வூட் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் அமைதியின்மை.

நோர்வூட் பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் அமைதியின்மை ஏற்பட்டது.

நோர்வூட் நகரிலுள்ள பெற்றோல் நிரப்பும் நிலையத்துக்கு ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று நண்பகல் 12 மணியளவில் பெற்றோல் கொண்டுவரப்பட்டது .

பெற்றோலைக் கொள்வனவு செய்வதற்காக நேற்றிரவு முதல் மக்கள் காத்திருந்தபோதும் இன்று காலையில் வந்தவர்களுக்கும் பெற்றோல் வழங்கப்பட்டமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நோர்வூட் பொலிஸார், அமைதியின்மையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.