வீட்டில் அதிகாலை தீ விபத்து; கணவன், மனைவி உயிரிழப்பு இரண்டு பிள்ளைகளும் படுகாயம்.

வீடொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு – கஹதுடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சொந்த வீட்டில் வசித்து வந்த 41 வயதுடைய கணவரும், 38 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்தத் தீ விபத்தில் சிக்கிய அவர்களது இரண்டு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.