காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம்!

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்தார்.

வீதியால் மோட்டார் சைக்கிள் சென்ற நபரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியாகினார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.