தொடரும் படுகொலைகள் : இன்றும் 2 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புகையிரத நிலைய வீதி, பட்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் வீதியில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2 வயது சிறுவனும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இன்று காலை மித்தெனிய பிரதேசத்தில் பூ வியாபாரி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மித்தெனிய பிரதேசத்தில் இன்று (26) காலை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பூக்கடை உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 52 வயதுடையவர்.

அவரது சடலம் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.