அயர்லாந்தை அசால்டாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது இந்திய அணி !!

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி டப்லினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டாஸ் போடப்பட்டபிறகு மழை பெய்ததால், இந்திய நேரப்படி 9 மணிக்கு துவங்க வேண்டிய போட்டியானது இரவு 11.25 மணிக்கே துவங்கியது. இதனால் போட்டியின் ஓவர்கள் இரு அணிகளுக்கும் தலா 12ஆக குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக டெக்டர் 64* ரன்கள் எடுத்தார்.

இதன்பின் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக இஷான் கிஷனும், தீபக் ஹூடாவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடாவுடன் கூட்டணி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்த போது ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழந்தாலும், தீபக் ஹூடா விக்கெட்டை இழக்காமல் 29 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 9.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.