எரிபொருள் பதுக்கல்: 768 பேர் சிக்கினார்கள்.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், எரிபொருளைப் பதுக்கி வைத்திருந்த 768 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கைகளின்போது இதுவரை 23 ஆயிரத்து 728 லீற்றர் பெற்றோலும், 41 ஆயிரத்து 382 லீற்றர் டீசலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 11 ஆயிரத்து 876 லீற்றர் மண்ணெண்ணெய்யையும் மீட்கப்பட்டுள்ளது. கைதானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.