திருட்டு ஜோடி கைது! – 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன்…..

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வீடுகள், கடைகளில் திருடப்பட்ட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

அதுமட்டுமின்றி அந்தப் பொருட்களுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு ஜோடியை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்தனர்.

பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸ் தலைமையக அதிகாரிகள் குழுவால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸாரின் தகவலின்படி, அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டனர் எனச் சந்தேகிக்கப்படும் தம்பதியிடம் இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கணிணி துணைக்கருவிகள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மின் சாதனங்கள் உட்பட சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை தலைமையகப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.