பொலிஸார் ஒருவர் சுட்டுத் தற்கொலை!

உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு, உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் கடவத்த – கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி முகாமின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றி வந்த அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

59 வயதான குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடுவலை – ஜல்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.