கந்தகாடு புனர்வாழ்வு கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிலர் கைது

பொலன்னறுவை வெலிகந்த, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த முகாமில் கடமையாற்றிய இரண்டு இராணுவ சிப்பாய்களும் இரண்டு விமானப்படை வீரர்களும் இன்று (1) கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த (29ஆம் திகதி) கந்தகாடு முகாமில் கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முகாமில் உள்ள கைதிகள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டதில் 647 கைதிகள் சோமாவதி காட்டுக்குள் தப்பிச் சென்றதுடன் இராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் கைதிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளில் கிட்டத்தட்ட 126 கைதிகள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (2) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.