யாழ். – தமிழகத்துக்கான விமான சேவை தாமதம்!

யாழ்., பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தில் இருந்து தமிழகத்துக்கான விமான சேவைகள் ஜுலை முதலாம் திகதி (நேற்று) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என்று கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்தில்கொண்டு, அந்த விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு நம்பர் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தமிழகத்துக்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அந்தச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், தற்போது அந்த விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் அந்தச் சேவைகளை ஆரம்பிக்க அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், எரிபொருள் பிரச்சினை மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக அந்த நடவடிக்கைகளைப் பிற்போட நேர்ந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.