எரிபொருள் கோரி நகர சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கம்பளை நகர சபை ஊழியர்களால் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தாம் தொழிலுக்கு வருகை தருவதற்கும் தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கும் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொடுக்கும்படி கோரியே இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கம்பளை நகர சபை வளாகத்தில் இருந்து நாவலப்பிட்டி வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் வரை பேரணியாக வருகை தந்த நகர சபை ஊழியர்கள் அங்கு போராட்டம் நடத்தினர்.

அந்நிலையில், அங்கு வருகை தந்த கம்பளைப் பொலிஸார், நகர சபை ஊழியர்களுக்கான எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுப்பதாகத் தெரிவித்ததையடுத்து நகர சபை ஊழியர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.