நாவலப்பிட்டியில் அரசுக்கு எதிராக இன்று போராட்டம்.

கண்டி, நாவலப்பிட்டி நகரில் அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுபாடு மற்றும் விலையேற்றத்துக்கும் நிரந்தர தீர்வு கோரி இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.