வடக்கு கடல் வளத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? – சபையில் டக்ளஸிடம் தயாசிறி கேள்வி.

“நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் கடற்படையினருக்கு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட முடியாதுள்ளது. இந்நிலையில் வடக்கு கடற்பரப்பை இந்திய மீனவர்கள் ஆக்கிரமிக்கின்றனர். எனவே, எமது கடல் வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், எரிபொருள் பிரச்சினையால் கடற்றொழிலாளர்களுக்குத் தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர எம்.பி. இதன்போது வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.