புதிய திரிபு கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் 4 தடுப்பூசிகளும் கட்டாயம்.

“புதிய திரிபு கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் உரிய வகையில் செலுத்திக்கொள்வதே, அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும்.”

இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் செலுத்திக்கொள்ள முடியும்.

கொரோனா 4ஆம் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பைக் குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபடவும் முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.