ஆஸி. செல்ல முற்பட்ட 45 பேர் திருமலைக் கடலில் சிக்கினர்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட 45 பேரில் 25 பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

கைதான அனைவரும் விசாரணைகளுக்காகக் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.