எரிபொருள் நிரப்பு நிலையம் மீது போத்தல், கல் வீச்சுத் தாக்குதல்! பொலிஸ் அதிகாரி காயம்; 13 பேர் கைது.

வெல்லவாய நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த எரிபொருள் தீர்ந்துபோய்விட்டது எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வரிசையில் காத்திருந்த சிலர் போத்தல் மற்றும் கற்களை வீசித் தாக்கினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் 20 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.