இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு : நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அமைச்சர், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்படும் வரை தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய நிறுவனமொன்றிடம் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணைகள் முடியும் வரை பதவி விலகுமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.