கோட்டாபய பறந்ததை உறுதிப்படுத்திய ரணில்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பிரதமரின் ஊடகப்பிரிவு ஊடகங்களுக்குச் செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் கோட்டாபய, நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு விமானம் ஒன்றை வழங்கியதை இலங்கையின் விமானப்படை உறுதிப்படுத்தியிருந்தது.

இன்று அதிகாலையில் ஜனாதிபதியும் அவரது பாரியாரும், இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் மாலைதீவுக்குச் சென்றிருந்தனர்.

பின்னர் அவர்கள் மாலைதீவில் தரையிறங்கியமையை அந்நாட்டுத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.

Leave A Reply

Your email address will not be published.