கோட்டாபயவை நாடு கடத்தக் கோரி மாலைதீவில் போராட்டம் (Video)

மாலைதீவில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாடு கடத்தக் கோரி மாலைதீவு தலைநகர் மாலேயில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவில் உள்ள மாலத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் வீட்டிற்கு அருகில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதியை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை இலங்கையிலிருந்து விமானப்படை விமானம் மூலம் மாலைதீவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் செல்வதற்கு விமானம் வழங்கியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு டுபாய் செல்லவுள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த போராட்டம் தொடர்பான காட்சிகள் கீழே,

Leave A Reply

Your email address will not be published.