கோட்டாவின் ராஜினாமா கடிதம் , சிங்கப்பூரில் இருந்து சபாநாயகருக்கு ….

தற்போது ஜனாதிபதி கோட்டாபய தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

சிங்கப்பூரில் இறங்கிய உடனேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜினாமா கடிதம் சபாநாயகருக்கு வாட்ஸ்அப் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கோத்தபாய ராஜபக்ஷ சபாநாயகருக்கு தொலைபேசியில் அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடிதம் கிடைக்கும் வரை அதனை வெளியிட முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு வரவிருக்கும் விமானம் மூலம் ராஜினாமா கடிதத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதியொன்று அனுபப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

Leave A Reply

Your email address will not be published.