பிரதமர் நீதியரசர், சட்டமா அதிபருடன் சபாநாயகர் ஆலோசனை!

கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதிப் பதவி விலகல் கடிதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அது சம்பந்தமாக பிரதம நீதியரசருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடிதத்தின் சட்டபூர்வத் தன்மை மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாகவே இந்த ஆலோசனை பெறப்பட்டது.

சட்டமா அதிபருடனும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதிப் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.