ரணிலை ஆதரிப்பதாக கூறிய மொட்டு பொதுச்செயலாளர் மீது ஜீ.எல் தாக்குதல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர வெளி வேட்பாளரை அல்ல என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருப்பதால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை வெற்றி பெறுவது சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் மிகவும் பொருத்தமான வேட்பாளர் எனவும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சி என்ற ரீதியில் வேறு எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கும் முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்

Leave A Reply

Your email address will not be published.