யாழில் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்சம் ரூபா வழிப்பறி.

யாழ். கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாகச் சம்பவம்

தொழிலில் முதலீடு செய்வதற்காக ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்சம் ரூபா பணத்தை இருவர் வழிப்பறிக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்று நடைபெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக தொடங்கவிருந்த தொழில் முயற்சிக்கு முதலீடு செய்வதற்கான 10 இலட்சம் ரூபாய் பணத்தை முனியப்பர் ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்துத் தருமாறு பூசகரிடம் கொடுத்துள்ளார்.

பூசகரும் அவரின் வேண்டுதலின் பிரகாரம் அந்தப் பணத்தைப் பூஜையில் வைத்து எடுத்துக்கொடுத்துள்ளார்.

குறித்த நபர் பணத்தைப் பூசகரிடம் வாங்கிக்கொண்டு ஆலயத்துக்கு வெளியில் வருவதற்கிடையில் அங்கு நின்றிருந்த இருவர் அப்பணத்தைப் பறித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.