மு. கா. யாருக்கு ஆதர்வு? கட்சி இன்று கூடி முடிவு.

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் 20ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எனினும், கட்சிக்குள் சில பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு தரப்பினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்குமாறும், பிறிதொரு தரப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறும் கூறி வருகின்ற நிலையில் கட்சியினர் இன்று கூடி முடிவெடுக்கவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.