மனோ – ஹக்கீம் – ரிஷாத் அணிகள் டலஸுக்கு வாக்களிக்கத் தீர்மானம்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தேர்தலில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைவர் மனோ கணேசன் இதனை உறுதிப்படுத்தினார்.

“தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து கூட்டரசாகச் செயற்பட இணங்கியுள்ள டலஸ் அழகப்பெருமவை ஆதரித்து வாக்களிக்கும். இதற்கான தீர்மானத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக்குழு இன்று மாலை கொழும்பு நுகேகொடை கட்சித் செயலகத்தில் கூடி முடிவெடுத்தது” என்று மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி என்ற அடிப்படையில், புதிய ஜனாதிபதிப் பதவிக்கான வாக்கெடுப்பில், டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் இன்று மாலை ஒன்றுகூடித் தீர்மானித்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் நிஷாம் காரியப்பர் இதனை உறுதிப்படுத்தினார்.

கொழும்பில் இன்று மாலை ஒன்றுகூடிய ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவெடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.