மொட்டில் உள்ள 10 பேர் டலஸுக்கு வாக்களிப்பதாக கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் !

புதிய ஜனாதிபதி தேர்வில் , பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயேச்சையாக செயற்பட்ட 10 பேர் கொண்ட குழு, நாளைய தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, சட்டத்தரணி வசந்த யாப்பா பண்டார, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் குணபால ரத்னசேகர, கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதயகாந்த குணதிலக்க, சுதத் மஞ்சுள, களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல. அகிலாசன எல்லாவல உள்ளிட்டோர் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.