பெட்ரோல் விலை உயர்வு: ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார் திருச்சி சிவா

பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக எம்.பி. திருச்சி சிவா அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பிரச்னைகளை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் முதல் இரண்டு நாள் கூட்டம் முடங்கியது.

இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக மாநிலங்களவைத் தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அதில், பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களும் உயரும் சூழல் உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.