காலிமுகத்திடலில் கைதான 9 பேருக்கும் பிணை (வீடியோ)

கொழும்பு – காலிமுகத்திடலில் அரச படைகள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்ட 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாகவும், நுழைவாயிலை அடைத்தும் முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் மற்றும் கூடாரங்களை அகற்றுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையின்போதே மேற்படி 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் இன்று அதிகாலை கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை, இந்தக் கூட்டு நடவடிக்கையின் பின்னர், போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனைச் சூழவுள்ள வளாகங்களை முப்படையினரும் பொலிஸாரும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.