வெள்ளவத்தையில் மாடியிலிருந்து வீழ்ந்து ஒருவர் பரிதாப உயிரிழப்பு.

வெள்ளவத்தை – விவேகானந்தா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து இன்று தவறி வீழ்ந்து நப ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனைப் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே உயிரிழந்தார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர், புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு மாடி அடுக்குமாடி குடியிருப்பில் பெயின்டராகப் பணியாற்றி வந்தவர் என்பது விசாரணைகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது.

அந்த நபர் நான்காவது மாடிப் படிக்கட்டில் இருந்து முதல் மாடியில் ழுந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.