யாழ். பல்கலையில் விரிவுரையாளர்கள் போராட்டம்!

அரசினுடைய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களுடைய போராட்டத்துக்கு மதிப்பளி, நாட்டைக் கொள்ளை அடிக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற பதாகைகளை ஏந்தி விரிவுரையாளர்கள் கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.