ஜே.வி.பியின் தலைவருடன் இந்தியத் தூதர் நேரடிப் பேச்சு.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இன்று பிற்பகல் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.