கோட்டையில் கடத்தப்பட்ட புஷ்பிக கொழும்பு தெற்கு குற்றப் பிரிவில் …

கோட்டை பிரதேசத்தில் நேற்றைய தினம் (27) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வேரங்க புஷ்பிக கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போராட்டம் தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அறியவருகிறது.

பேருந்தில் இருந்த இந்த இளைஞனை சிவில் உடையில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.