சம்பளம் கொடுக்க முடியாது! லேக்ஹவுஸை சூப்பர் ஹோட்டலாக மாற்ற ரணில் முடிவு!

“லேக் ஹவுஸ்” அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடத்தை ஹோட்டல் வளாகம் ஒன்றிற்காக முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கான பிரேரணை வெகுஜன ஊடக அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சம்பளம் மற்றும் கடனை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தை கொழும்பில் வேறொரு இடத்தில் ஆரம்பிக்கவும் அல்லது பெறப்படும் பணத்தில் அந்த நிறுவனத்தை கலைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

பழமையான கட்டிடங்கள் சுற்றுலாவை மேம்படுத்த உதவுவதால், இங்கு ஹோட்டல் வளாகத்தை அமைப்பதே நோக்கம் என வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணி தொண்ணூறு வருட குத்தகையின் கீழ் வழங்கப்பட்டுள்ளதுடன், குத்தகைக் காலமும் அடுத்த வருடத்துடன் நிறைவடையவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தாத்தாவான டி.ஆர். விஜயவர்தனதான் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிறுவனர். இந்த நிறுவனம் ஶ்ரீமாவோ ஆட்சியின் போது அரசுடமையாக்கப்பட்டது. அதன் பின்னரே அவர் Wijeya Newspapers Ltdடை ஆரம்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.