நாட்டுக்குத் திரும்பும் கோட்டாவின் வழக்குகளை மீளவும் விசாரிக்குக! – ஜே.வி.பி. வலியுறுத்து.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியவுடன் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் மீண்டும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டை விட்டுச் சென்ற கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் குடிமகன் என்ற அடிப்படையில், நாட்டுக்கு திரும்பி வர உரிமையுள்ளது.

எனினும், அவர் ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் அனுபவித்து வந்த தண்டனையின்மை வாய்ப்பைப் பயன்படுத்த முடியாது. அவருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.