தனிஷ் அலி தொடர்ந்து தடுப்பு காவலில்…

சட்டவிரோதமான முறையில் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் பிரவேசித்து அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தனிஷ் அலியை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபருக்கான பிணை உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் திரு.நந்தன அமரசிங்க உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு இன்று (01) முற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை.

இதன்படி, சந்தேக நபரை நாளை (02) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதன் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

பொலிஸாரும் பிரதிவாதிகளும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் பிணை உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.