கோட்டா இலங்கைக்கு வந்தால் அரசுதான் பாதுகாக்கவேண்டும் ‘மொட்டு’க் கட்சி கூறுகின்றது.

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் அவரை அரசுதான் பாதுகாக்க வேண்டும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார்.

‘முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்புவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல. அவர் இந்த நேரத்தில் நாட்டுக்கு வந்தால் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படலாம்’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். இந்நிலையிலே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கோட்டாபய ராஜபக்ச இலங்கைப் பிரஜை. இங்கு வருவதற்கான உரிமை அவருக்கு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, அவர் நாடு திரும்பினால் அவரை அரசுதான் பாதுகாக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.