எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு.

முன்னிலை சோசலிசக் கட்சியால் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவில் இன்று மாலை நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தை தடுத்து உத்தரவிட நீதிமன்றத்துக்கு இயலுமை இல்லை என்று நீதிவான் அறிவித்துள்ளார்.

அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுமாயின், பொலிஸாருக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிவான் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.