மொட்டு கட்சி பிரதேசபை உறுப்பினர் சுட்டுக் கொலை (Video / பிந்திய இணைப்பு)

முல்லேரியா வங்கிச் சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொட்டிகாவத்தை முல்லேரியா உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் (மொட்டு) பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷான் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய இணைப்பு

கொட்டிகாவத்தை உள்ளூராட்சி சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சுமுது ருக்ஷானே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

அவரை இலக்கு வைத்து இன்று (02) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லேரிய வங்கிச் சந்திக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தங்கியிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.