இலண்டன் வந்த இலங்கை தடகள வீரரை காணவில்லை

இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெற்ற 22ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றிய மூன்றாவது வீரரும் காணாமல் போயுள்ளதாக அணி நிர்வாகம் இன்று (3) அறிவித்துள்ளது.

காணாமல் போன தடகள வீரர் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் சுற்று மல்யுத்தத்தில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.

முன்னதாக இலங்கை ஜூடோ வீரர் ஒருவரும், ஜூடோ அணியின் அதிகாரி ஒருவரும் காணாமல் போயிருந்தனர்.

அதன்பிறகு அனைத்து வீரர்களின் பாஸ்போர்ட்டையும் கைப்பற்ற அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. பாஸ்போர்ட்களை எடுத்தும் பிரயோசமில்லை , அவர்கள் ஓடிவிடுகிறார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.