பெத்தும் கெர்னருக்கு பிணை! நாடு செல்ல தடை!

பொல்துவ மன்சந்தியில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டமைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கலாநிதி பதும் கெர்னரை சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல இன்று (4) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9-12 மணிக்குள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு பிணை நிபந்தனைகளை விதித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.